யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Charulatha A
- Mar 18, 2024
- 1 min read
எல்லா ஊரும் நம்முடைய ஊரே,
உலகில் உள்ளோர் அனைவரும் நம் சொந்தம்,
பகைமை என்பது பாரினில் இல்லை,
நட்பு என்பதே நாட்டின் நடப்பு,
மகிழ்ச்சி வரும் போது தன்னை மறக்காதே,
துன்பம் வரும் போது துவண்டு போகாதே,
வானம் மின்னி மழையாய் பொழிகிறது,
பெய்த மழை வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது,
வெள்ளத்தில் வழியே உருண்டுவரும் கற்கள் போல,
ஊழின் வழியே உலக வாழ்க்கை செல்கிறது.
விதை நமது, விருட்சமாய் உலகு....
மரங்களின் வளர்ச்சி, இயற்கையின் எழுச்சி....
வருமுன் காப்போம், வளமாய் வாழ்வோம்……
நம்பிக்கையுடன்,
சாருலதா அன்பழகன்
Comments